Wednesday, April 28, 2010

சென்னையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் முதல்வர் அனுமதி பெறவேண்டும். ஆனால் பார்வதி அம்மாளிடமிருந்து கடிதம் வேண்டும் என முதல்வர் தெரிவிப்பாம்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளுக்கு சென்னையில் சிகிச்சை அளிக்க மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டும் என தமிழக முதல்வர் கருணாநிதியிடம் மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தி.மு.க அணியை ஆதரிக்கும் சிலர் தமிழக முதல்வர் கருணாநிதியை நேற்றய தினம் திங்கள்கிழமை இரவு அவரது வீட்டில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

மலேசியாவிலிருந்து சிகிச்சை பெறுவதற்காக கடந்த 16‐ம் திகதி இரவு விமானம் மூலம் சென்னை சென்ற பார்வதி அம்மாள், மலேசியாவுக்கே திருப்பி அனுப்பப்பட்டார். அவர் சென்னையில் சிகிச்சை பெற விருப்பம் தெரிவித்து கடிதம் எழுதினால், அதற்கான அனுமதியை மத்திய அரசிடம் இருந்து பெற்று, அவரது சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியதாக தெரிகிறது.

முதல்வர் கருணாநிதி, பார்வதி அம்மாள் கடிதம் எழுதினால், மத்திய அரசிடம் நிச்சயம் அனுமதி பெற்று, சிகிச்சைக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார் எனவு சுப. வீரபாண்டியன் தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் இருந்துள்ளதாய் தகவல்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment